×

பிறந்தநாள் பார்ட்டியில் ரவுடிகளுக்குள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு


தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் முரளி (எ) பாம் முரளி (22), பிரபல ரவுடி. இவருடைய நண்பர் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த விக்கி (22). இவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு விளையாட்டு திடல் அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது பாம் முரளிக்கும், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனோஜ் கட்டையால் பாம் முரளியை தாக்கி உள்ளார். இதனால் முரளி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனோஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.

இதுதொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பாம் முரளி, விக்கி, புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சஞ்சய் (19), எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த முகேஷ் (23) ஆகியோரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். வெட்டுப்பட்ட மனோஜ் எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிறந்தநாள் பார்ட்டியில் ரவுடிகளுக்குள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Murali (A) Bam Murali ,Puduvannarappet Tsunami Residence ,Vicky ,Tsunami Residence ,Puduvannarappet ,
× RELATED துணிக்கடையில் தீ விபத்து